Powered By Blogger

Sunday, September 26, 2010

காதல் மன்னன் ஆகுவது எப்படி

முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில
ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே
கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி
அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான
விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம்.
தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக்
பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக
சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும்
திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.

7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட்
ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை
அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள்
ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு
வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம்.
பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that,
Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு
இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க
போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச்
பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே
கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப
ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ்
பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த
கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட "அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ்,
எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும்.
உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா
எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட்
இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம்
கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு
விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது..
மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க.
முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல்
மன்னன்தான்...

குருவின் மலசிக்கலை போக்கிய சிஷ்யன்

அது பெரிய மது விற்பனைக் கடை. விஸ்கி, பிராண்டி, ரம், ஜின் என்று
எல்லாமே இறக்குமதிச் சரக்குகளாகவும் கலக்கலாகவும் இருக்கும்.
லிக்கர் ஸ்பெஷல் டூட்டி ஃப்ரீ கடை என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

கடைக்காரர், தன் உதவியாளருடன் வந்தவர், கடையைத் திறந்து,
வழக்கமாகச் செய்யும் ஒதுங்க வைக்கும் வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு,
கடையில் இருந்த சாமி படத்திற்குப் பூவெல்லாம் வைத்துவிட்டுக் கல்லாவில்
அமர்ந்தார்.

சற்று நேரத்தில், கடைக்குச் சரக்கு வாங்க, முதல் நபர் வர, வந்தவரைப்
பார்த்தவுடன் கடைக்காரருக்குத் தூக்கி வாரிப்போட்டது.

பின்னே இருக்காதா?

அந்த ஊரின் பிரபலமான ஆசிரமத்தைச் சேர்ந்த குட்டி சாமியார் ஒருவர்,
அதாவது இளம் வயது சாமியார் ஒருவர் வந்து கடைக்குள் நுழைய, நம்ம கடை
ஓனர் திகைத்துப் போய்விட்டார்.

மெதுவாகக் கேட்டார்: "என்ன சாமி இங்கே? ஆச்சரியமாக இருக்கிறது?"

வந்தவர் சொன்னார்."பெரிய சாமியாருக்கு மலச்சிக்கல். ஒரு ஃபுல் பாட்டில்
பிராண்டி வேண்டும்."

கடைக்காரருக்குக் காரணம் சரியாகப் படவே, ஒன்றும் சொல்லாமல்
இருப்பதிலேயே அதிக விலையுள்ள முழு பிராண்டி பாட்டில் ஒன்றை எடுத்து
நன்றாகப் பேப்பரில் மறைத்து வைத்துக் கட்டிக் கொடுத்தார்.

குட்டி சாமியார் பணத்தை எடுத்து நீட்ட, கடைக்காரர் மறுத்துவிட்டார்.

"பெரிய சாமியார் பெயரைச் சொல்லியிருக்கிறீர்கள். ஆகவே இது என்னுடைய
காணிக்கையாக இருக்கட்டும். பணம் வேண்டாம் சும்மா எடுத்துக் கொண்டு
போங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்
..............................
................................................................................

அதற்குப் பிறகு என்ன நடந்தது?

scroll down
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

கடைக்காரர் அன்று இரவு எட்டு மணிக்குக் கடையைப் பூட்டிக் கொண்டு வீட்டிற்குக்
காரில் திரும்பும் வழியில் பார்த்தால், ஆசிரமத்தின் வாசலில் பயங்கரக் கூட்டம்

கடைக்காரர் பயந்துவிட்டார். காலையில் கொடுத்த சரக்கில் ஏதாவது மனுஃபாக்சரிங்
டிஃபெக்ட் இருந்து, அதனால் பெரிய சாமியாருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்து
விட்டதோ என்று மனது ஒரு வினாடி ஆடிப்போய்விட்டது.

ஓட்டுனரிடம் சொல்லிக் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, நின்று கொண்டிருந்த கூட்டத்தை
விலக்கிக் கொண்டு, உள்ளே போய்ப் பார்த்தால், ஆசிரமத்தின் நுழைவாயில் கேட் அருகே
குட்டி சாமியார் பயங்கரமாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

மடித்து, டப்பாக் கட்டு கட்டிய காவி வேட்டி, தலையில் இறுக்கிக் கட்டியிருந்த
காவித்துண்டு. கழுத்தில் ஒரு மலர் மாலை. அதோடு பாட்டு வேறு.

"நீ முன்னாலே போனா, நான் பின்னாலே வாரேன்!"

கடைக்காரரைப் பார்த்தவுடன், சப்ஜாடாக எல்லாம் நின்றுவிட்டது. கடைக்காரர் சற்று
நெருங்கிச் சென்றார். பிராண்டி வாசம் ஆளைத் தூக்கியது

கடைக்காரர் குட்டி சாமியாரின் காதில் மெதுவாகக் கிசுகிசுத்தார்

"சாமி இது உங்களுக்கே நியாயமாக இருக்கிறதா? காலையில் என்ன சொல்லிச் சரக்கை
வாங்கினீர்கள்?"

"பெரிய சாமியாருக்கு மலச்சிக்கல் என்று சொல்லி வாங்கினேன்"

"இப்போது என்ன நடக்கிறது இங்கே?"

"இதுவும் பெரிய சாமியாரின் மலச்சிக்கலுக்காகத்தான்!"

"எப்படிச் சொல்கிறீர்கள்?"

"இதைப் பார்த்தவுடன், பெரிய சாமியாருக்கு உடம்பில் எந்த சிக்கலும்
இருக்காது. வயிற்றைக் கலக்கிவிடும்! இன்று இரவிற்குள் அவரைப் பத்து
தடவையாவது கழிப்பறைக்கு அனுப்பி வைக்கும் நோக்கத்துடன்தான்
சரக்கடித்துவிட்டு, இங்கே நின்று நான் ஆடிக்கொண்டிருக்கிறேன்"

ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க என்ன பண்றாங்க ???????????

ம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்பீங்க?" - நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா. நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"

"இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" - அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான். ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.
"
அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன் ஒத்துபானா?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" - அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றது மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை. புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா விடுவான்? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு. அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை." இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintanence and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும்.

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா."

Saturday, September 25, 2010

நான் ரசித்த கண்ணதாசன் 1

குழந்தையின் குமுறல் :-

காமதேவன் விட்ட அம்பு காலதேவன் மடியில் விழுந்து விட்டது
இனி நான்
மரணதேவனை பார்க்கும் வரை
என் வாழ்கை
கரணம் போட்டாக வேண்டும்

நான் அழும் பொழுது என்னை சமாதானம் செய்ய வேண்டாம்
நான்
பசிக்காக அழவில்லை
பிறந்த பாவத்திற்காக அழுகிறேன்

அம்மா உன் ஒரு நாள் சந்தோசத்திற்காக
நான் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட போகிறேன்


( கவிஞரே உம்மை வெல்ல ஒருவனும் பிறந்தது இல்லை பிறக்க போவதும் இல்லை சும்மாவாக சொன்னிர்கள் " நான் நிரந்தரம்மானவன்அழிவதில்லை " உண்மை, உம்மை காலன் எம்மிடம் இருந்து பிரித்தாலும் உம கவிதையால் எம்மை விட்டு நீவிர் நீங்குவது இல்லை )

Thursday, September 23, 2010

உணவு நெருக்கடி என்பது உணவுப் பற்றாக்குறை அல்ல!

உணவு நெருக்கடி என்பது இன்னும் தீரவில்லை. அதைப்பற்றிப் பேசுவதும், சிந்திப்பதும் ஒதுக்கப்பட்டுள்ளது அல்லது மறக்கடிக்கப்பட்டுவிட்டது. பணம் உள்ளவர்கள் நன்றாக, செறிவாக உண்கிறார்கள். ஏழைகள் ஒன்று கிடைத்ததை உண்கிறார்கள் அல்லது பட்டினி கிடக்கிறார்கள்.

வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகளில் உணவுப் பொருட்களை வாங்குவதற்குப் பலர் செலவு செய்ய முடிவதில்லை. பசி தொடர்கிறது.

பொதுவாக வறுமை எதனால் ஏற்படுகிறது என்பதற்கு கீழ் வரும் காரணங்கள் கூறப்படுகிறது:

கடுமையான இயற்கைப் பேரழிவ

அரசின் பல்வேறு பொருளாதாரககொள்கைகளிலபாகுபாடமற்றும் சார்புநிலை வாதம

போர

மோசமான உள்கட்டமைப்பும், பொருளாதாரமும், லஞ்சமும், ஊழலும

இன்னபிற...

ஆனால் இதற்கெல்லாம் இன்று வைக்கப்படும் தீர்வு என்ன தெரியுமா?

"உயர் தொழில்நுட்ப வேளாண்மை"

இந்த பிரச்சாரத்தில்தான் கார்ப்பரேட் ஊடகங்கள் ஈடுபட்டு வருகின்றன. தீர்வு என்று அவர்கள் கருதும் "உயர் தொழில்நுட்ப வேளாண்மை" சில பல மேற்கத்திய கார்ப்பரேட் நிறுவனங்களின் நிதிப் பெருக்கத்திற்கும் ஏழை நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின் 'நிதிப் பெருக்கத்திற்கும்' மட்டுமே இட்டுச் சென்றிருக்கிறது என்பது வரலாற்று உண்மை.

இந்தியாவில் 'பசுமைப் புரட்சி' செய்த 'மிகப்பெரிய விதைக்கொள்ளை' (The Great Grain Robbery) -பற்றியெல்லாம் நாம் கேள்விப்படாதது ஒன்றும் இல்லை. ஆனால் இதனை நாம் நினைவில் வைத்துக் கொள்ள முடியாத அளவுக்கு உலக கார்ப்பரேட் ஊடகங்கள் உயர் தொழில்நுட்ப வேளாண்மை என்ற மாயையை உலகம் முழுதும் பரப்பி வருகின்றன.

உணவு நெருக்கடிக்கும், வறுமைக்கும் காரணங்கள் பலவிருக்க, மான்சாண்ட்டோ உள்ளிட்ட பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுக்கும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள், நச்சு ரசாயனப் பொதிகள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட விலங்குகள் ஆகியவை வறுமையைப் போக்கி ஏழைகளை வாழவைக்கும் என்று கார்ப்பரேட் விஞ்ஞானமும், அதனிடம் கையேந்தி நிற்கும் ஊடகங்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் திட்டமிட்ட பொய்யைப் பரப்பி வருகின்றனர்.

அதாவது தேசிய வேளாண் சந்தைகளை சர்வதேச சக்திகளுக்குத் திறந்து விடுவதுதான் நீண்டகால பொருளாதாரப் பயன்களை அளிக்கும் என்றும், தாரள மய வாணிபத்தில்தான் ஏழை நாடுகள் வளர்ச்சியடைய முடியும் என்ற பிரச்சாரம் அரசு எந்திரங்கள் முதல் ஊடகங்கள் வரை செய்து வருகின்றன.

இதற்குச் சிறந்த ஆதாரமாக நாம் ஒன்றை எடுத்துக்காட்டினால் அதிர்ச்சி ஏற்படும்:

"வளர்ச்சிகான வேளாண் அறிவு, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பன்னாட்டு மதிப்பீடு" (The International Assessment of Agricultural knowledge, Science and Technology for Development - IAASTD) என்ற அமைப்பு உலகம் முழுதும் 400 நிபுணர்களை பாரபட்சமின்றித் தேர்வு செய்து ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு தரப்பட்ட வேளாண் விவகாரங்களும் அலசப்பட்டுள்ளன. அந்த அறிக்கை சுமார் 600 பக்கங்களுக்கும் அதிகமானது.

இதில் கூறப்பட்டுள்ள நியாயமான கருத்துக்களை அமெரிக்கா, கனடா உள்ளிட்ட சில பணக்கார நாடுகளும், பசுமைப் புரட்சி பிரச்சாகர்களும் இருட்டடிப்பு செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ள வாசகம்: "There is growing concern that opening national agricultural markets to international competition before basic institution and infrastructures are in place can undermine the agricultural sector, with long term negative effects for poverty, food security and the environment."
இதன் தமிழாக்கம் வருமாறு:

"அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படுவதற்கு முன்னர் தேசிய வேளாண் சந்தைகளை சர்வதேசப் போட்டிக்குத் திறந்து விடுவது, வேளாண் துறையை அழிப்ப்தோடு வறுமை, உணவுப்பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும் என்ற அச்சம் வளர்ந்து வருகிறது"

இதனை அமெரிக்கா கீழ்வருமாறு மாற்ற வலியுறுத்தியது:
"Opening natioanal agriculture markets to international competition can offer economic benefits, but can lead to long-term negative effects on poverty alleviation, food security and the environment without basic national institution and infrastructure being in place"

இதன் தமிழாக்கம் வருமாறு: "தேசிய வேளாண் சந்தைகளை சர்வதேச சந்தைகளுக்கு திறந்து விடுவதால் பொருளாதாரப் பயன்கள் உண்டு, ஆனால் அடிப்படையான தேசிய நிறுவனம் மற்றும் உள்கட்டமைப்பு இல்லாதபட்சத்தில் வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் இது நீண்டகால எதிர்மறை விளவுகளுக்கு இட்டுச் செல்லும்"

பொருளாதாரப் பயன்கள் உண்டு என்பது அமெரிக்கா சேர்க்க வலியுறுத்திய சொற்றொடர். மூல வாக்கியத்தில் இல்லை. மேலும் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு என்றுதான் இருக்கிறதே தவிர அடிப்படை தேசிய நிறுவனம் என்று மூலத்தில் இல்லை. தேசிய என்று சேர்ப்பதன் மூலம் சுரண்டப்படும் நாடுகளுக்கே எதிர்மறை விளைவுகளிலிருந்து வெளிவரும் பொறுப்பு உள்ளது என்ற பொருள் ஏற்படுகிறது. அதாவது சுரண்டுவது நான், ஆனால் அதிலிருந்து வெளியே வர வேண்டியது உன்பாடு. பொருளாதார மோசடியோடு, மொழி மோசடியும் செய்வதைப் பாருங்கள். இதைவிட முக்கியமானது undermine the agricultural sector என்று மூலத்தில் உள்ளது. அமெரிக்கா பரிந்துரை செய்த வாசகத்தில் இது திட்டமிட்டு காணாமல் அடிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியச் சுரண்டலுக்கு ஆட்படுவது ஏழைநாடுகளின் உழைக்கும் மக்கள் மட்டுமல்ல, மொழியும்தான்.
எதை எப்படிக் கூறவேண்டும் என்ற அதிகாரத்தையே பணக்கார நாடுகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். உண்மையை மறைத்து இவர்கள் உருவாக்கிய உண்மைபோல்களை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிறது அதிகாரம்! இவர்களின் நச்சு உற்பத்திகளையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், மொழியை நச்சுமயமாக்கிச் செய்யும் வாசக உற்பத்திகளையும் நாம் ஏற்கவேண்டும்! எப்படியிருக்கிறது கதை!

மற்றொரு மோசடி வலியுறுத்தலைப் பார்ப்போம்: 'compensating revenues lost as a result of tarrif reductions is essential to advancing development agendas.'
இதனை அமெரிக்காவும், கனடாவும் : 'provision of assistance to help low income countries affected by liberalization to adjust and benefit from liberalized trade is essential to advancing development agendas' என்று மாற்றுமாறு பரிந்துரை செய்துள்ளது.
"தாராளமயத்தால் பாதிக்கப்பட்வருவாய் இழப்பு ஏற்படும் நாடுகளுக்கு உதவி அளிப்பது என்பது தாராளமயத்தால் ஏற்பட்ட விளைவுகளுக்குத் தங்களை தகவமைத்துக் கொள்வதும் தாராளமய வாணிபத்தால் பயனடைவதும் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியம்".

இவ்வாறு மாற்ற வலியுறுத்தியுள்ளது, அந்த அமைப்பின் அறிக்கைக்கும், இவர்கள் மாற்றச்சொல்லி பரிந்துரை செய்த வாசகங்களுக்கும் உள்ள மலைக்கும் மடுவுக்குமான வேறுபாட்டைக் கவனியுங்கள்!

ஏனெனில் அந்த அமைப்பு வறுமையை ஒழிக்கப் பரிந்துரை செய்த விஷயங்கள் உள்ளூர், மரபு வழி விவசாயம், விவசாயிகளின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாய உற்பத்தி, உயிர்ப் பரவலை சாகடிக்காத வேளாண்மை ஆகியவையே.

மரபணு மாற்றம் செய்த விதைகள், வீரிய விதைகள், உயிர்ப்பரவல் சாகடிப்பு உயர் தொழில்நுட்ப விவசாயம் வறுமையைப் போக்க உதவாது என்று அந்த நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.

உலக ஏழைகளுக்கு உணவளிக்க நியாயமான நில விநியோக முறைகள், சிறு விவசாயிகள் நிலத்தில் தாங்களாகவே தங்களது முறைப்படி பயிர் செய்வதற்கான அதிகாரம் இவற்றால் விளையும் நியாயமான உணவு உற்பத்தி இவற்றை மட்டுமே பரிசீலிக்கவேண்டும். என்று மறைமுகமாக அந்த அறிக்கைக் கூறியுள்ளது.

கார்ப்பரேட் நிறுவனக் கட்டுப்பாட்டில் உள்ள உயர் தொழில் நுட்ப வேளாண்மை பணக்கார நாடுகளுக்கு உபரி உணவுகளை அளிப்பதோடு நிறுவனங்களின் பெரும் பண லாபங்களை ஈட்டித் தருவது.

மொசாம்பிக் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உணவுப் போராட்டங்களுக்குக் காரணம் கோதுமை விலை வானளாவ உயர்ந்ததே. ஐ.ா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு வரலாற்றிலேயே 3-வது மிகப்பெரிய கோதுமை அறுவடைக்காலம் இது என்று கூறியிருந்தும் சில பல ஆப்பிரிக்க நாடுகளில் உணவுப்பஞ்சம்!

இதற்குக் காரணம் உணவுப்பற்றாக்குறை அல்ல. சர்வதேசச் சந்தைகளில் கோதுமை விலை எந்த அளவுக்கு உயரும் என்ற எதிர்பார்ப்பு, எதிர்கால வர்த்தகத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈடுபட்டு கோதுமை விலையை உயர்த்தி இருப்பை செயற்கையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததே.

ஏற்கனவே இந்தியாவில் நாம் பசுமைப் புரட்சியின் பலன்களை அனுபவித்து வருகிறோம், மரபான எண்ணற்ற விதைகள் கொள்ளைபோய் வீரிய விதைகளை விவசாயிகள் மீது திணித்து, வேளாண் உற்பத்தியின் இடுபொருள்களின் கட்டுக்கடங்கா விலைகளையும் அவர்கள் மீது திணித்து, நிலமும், உடலும் பாழாகி, எதற்கும் லாயக்கற்றதாகி இன்று நிற்கிறது நிலமும் அதைச்சார்ந்த வேளாண் மக்களும், ரிச்சாரிய போன்ற விஞ்ஞானிகள் நமது அரசுடனும், ராக்ஃபெல்லர், ஃபோர்ட் பவுண்டேஷன் ஆகிய அறக்கட்டளைகளுடன் போராடிப் போராடி ஓய்ந்தே போனார்!

இந்த நிலையில் ஆப்பிரிக்காவில் பசுமைப் புரட்சிக்கான கூட்டிணைவு (AGRA) என்பதை பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ், ராக்ஃபெல்லர் அறக்கட்டளைகள் உருவாக்கியுள்ளன. அதாவது ஆப்பிரிக்காவுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் வளங்களை அளிக்க என்ற பிரச்சாரத்தில் இது செயல்பட்டு வருகிறது.

இதிலும் பிரதானப் பங்கு வகிப்பது 'நிலச்சாகடிப்பு மான்சாண்டோ' நிறுவனம்தான். இந்தியாவில் BT பருத்தி, கத்திரிக்காய் ஆகியவற்றைக் கொண்டு வ்ந்து கொட்டிய அதே பிரச்சாரம்தான் ஆப்பிரிக்காவிலும் தொடர்கிறது. அதிக மகசூல், பஞ்சத் தடுப்பு, வறுமை ஒழிப்பு ஆகிய பொய்ப் பிரச்சாரங்கள் மீண்டும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.

பழைய பசுமைப் புரட்சியே நாறிக் கொண்டிருக்கும் வேளையில் அதே பொய்ப் பிரச்சாரங்களுடன் புதிய பசுமைப் புரட்சி!!!

இந்தமுறை தூண்டிலை வேறுமாதிரி மாட்டியுள்ளது மான்சாண்டோ, அதாவது ஏழை, சிறு விவசாயிகளுக்கு மரபணு மாற்ற வீரிய விதைகளை இலவசமாக வழங்குகிறதாம்! ஆனால் நடக்கப்போவது என்ன? இலவச விதைகளைப் பயிரிட்டு அந்த நிலங்களை இந்த விதையைச் சார்ந்ததாக்கி, அடுத்த ஆண்டில் அவர்கள் வீரிய விதைகளை மான்சாண்ட்டோவிடமிருந்து பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும்.

ஏனெனில் இந்தப் புதிய பசுமைப் புரட்சியின் நாயகனான கேட்ஸ் அறக்கட்டளை 2010ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டில் மட்டும் மான்சாண்ட்டோவிடமிருந்து 23.1 மில்லியன் டாலர்களுக்கு விதைகளை வாங்கி வைத்துள்ளது.

வரும் காலங்களில் ஆப்பிரிக்க விவசாயிகளின் தற்கொலைகள் எண்ணிக்கைகளும் புள்ளிவிவரக் கணக்கெடுப்புகளில் சேர்ந்து விடும். அதைத்தவிர மான்சாண்ட்டோ வேறு எதைச் சாதித்து விட முடியும்?

உலக அளவில் வேளான் தொழிலாளர்களாக இருப்பதில் பெண்களே அதிகம். ஆனால் எந்தவொரு கொள்கை வகுப்பிலும் அவர்களது கருத்திற்கு இடமில்லை. சொல்வதைச் செய் என்ற நிலைதான் வீட்டுக்கு வெளியேயும் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச வாணிபச் சட்டகம், ஐ.எம்.எஃப்., உலக வங்கி ஆகியவை வளரும் நாடுகள் மீது செய்து வரும் கிடுக்கிப்பிடி ஒப்பந்தங்கள், குறிப்பாக ஏற்றுமதிக்கானப் பொருட்களை உற்பத்தி செய்வதற்கான விதைப் பயிரிடல் என்பதை வலியுறுத்தும் ஒப்பந்தங்கள் ஆகியவைதான் ஏழை நாடுகளின் வறுமைக்கும் உணவின்மைக்கும் காரணம்.

வறுமையில் வாடும் மக்களின் துயரைப்போக்க விவசாயம் இல்லை. ஏதோ நிறுவனங்களின் லாபத்திற்கும், ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் வசதி செய்து கொடுக்கும் விவசாயம்! இதுதான் இப்போதைய நிலை.

உலகத்திற்குச் சோறுபோடுபவரகள் விவசாயிகள் குறிப்பாக பெண் விவசாயிகள், ராக்பெல்லர், ஃபோர்டு, கேட்ஸ் அறக்கட்டளைகளோ அல்லது மான்சாண்ட்டோ நிறுவனமோ அல்ல.

வளரும் நாடுகளின் மேட்டுக்குடி அரசியல்வாதிகளும், அவர்களின் கொள்கைகளுக்கு எடுபிடியாய்த் திகழும் ஆட்சியதிகார எந்திரங்களும் (படித்தவர்களும், நிபுணர்களும் மிகுந்த எந்திரம்) நம்மை அல்ல... ஏழை மக்களை எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்கள் பற்றி என்றேனும் யோசிப்பார்களா?

Wednesday, September 22, 2010

எந்திரன் - மீடியாக்களின் மிகை யதார்த்தம்

அக்டோபர் 1ஆம் தேதி எந்திரன் வெளியாகிறது. ர‌ஜினி நடித்தப் படங்கள் வெளியாகும் போது வழக்கத்துக்கு மாறான பரபரப்பும், ஆர்ப்பாட்டமும் இருக்கும். இது அவரது மாஸ் இமே‌ஜ் மற்றும் ரசிகர்களால் ஏற்படுவது.

பாபா வெளிவந்த போதும் மிகப்பெ‌ரிய அளவில் மீடியாக்கள் கொட்டி முழ‌ங்‌கின. பாபா பக்கம் என்று தனிப் பகுதி ஒதுக்கியவர்கள் படம் வெளியான பிறகு ர‌ஜினி ஏமாற்றிவிட்டதாகவும், அரைத்த மாவையே அரைத்திருப்பதாகவும் அங்கலாயத்துக் கொண்டனர். ர‌ஜினி ஒரு நல்ல படத்தை தரவில்லை என்ற ஆதங்கத்தைவிட, நமது ஓவர் பில்டப் வாசகர் முன் சாயம் இழந்துவிட்டதே என்ற கோபம்தான் அவர்களை விமர்சனத்தில், அரைத்த மாவு என்று நெ‌ளிய வைத்தது.

WD
எந்திரன் வெளிவரும் இந்த காலகட்டத்தில் விளம்பரம், வர்த்தகம் என அனைத்துமே மாற்றமடைந்துவிட்டது. ஸ்டார் வேல்யூ இல்லாத நடிகர்களின் கதையில்லா படங்களையும் விளம்பரம் மூலம் ஓட வைக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள். தொலைக்காட்சியும், அச்சு ஊடகமும் கையிலிருந்தால் எதையும் விற்றுவிட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சியின் ஆபத்து குறித்துப் பேசும் சமூகவியலாளர் பியர் பூர்தியூ முக்கியமான ஒரு விஷயத்தை தெ‌ளிவுப்படுத்துகிறார். தொலைக்காட்சி என்பது யதார்த்தத்தை காண்பிப்பது என்பதைத் தாண்டி யதார்த்தத்தை போலியாக உருவாக்குவதாக குற்றம்சாற்றுகிறார்.

உதாரணமாக, குஷ்பு கற்பு குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெ‌ரிவித்து நடந்த போராட்டத்தில் பதினைந்துக்கும் குறைவானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஒரு தெருவைக்கூட சலசலப்புக்கு உள்ளாக்காத இந்த போராட்டத்தை குறிப்பிட்ட தொலைக்காட்சி ஒன்று மறுபடியும் மறுபடியும் ஒளிபரப்பியது, தனது அச்சு ஊடகத்தில் தலைப்புச் செய்தியாக்கியது. தமிழ்நாட்டில் அன்றைய தேதியில் அதுதான் மிகப் பெ‌ரிய பிரச்சனையாக ஊதி பெ‌ரிதாக்கப்பட்டது.

குறிப்பிட்ட அந்த தொலைக்காட்சி இந்த செய்திக்கு அளவுக்கு மீறிய அழுத்தத்தை கொடுக்காமல் இருந்திருந்தால் தமிழர்களின் கவனத்தில் அது பதியாமலே போயிருக்கும், நமக்கு ஒரு ‘திடீர்’ அரசியல்வாதியும் கிடைத்திருக்க மாட்டார்.

எந்தப் பிரச்சனையை எடுத்துக் கொள்வது, எதை ஊதிப் பெ‌ரிதாக்குவது என்பது மட்டுமின்றி எதை பிரச்சனைக்குள்ளாக்குவது என்பதுவரை தொலைக்காட்சிகளை நிர்வகிக்கும் தனி மனிதர்களால்தான் முடிவு செய்யப்படுகிறது. இன்னும் ச‌ரியாகச் சொன்னால் நாம் எதை பார்க்க வேண்டும், எதை பார்க்கக் கூடாது என்பதையே இந்த தனி மனிதர்கள்தான் முடிவு செய்கிறார்கள். இதைதான் பியர் பூர்தியூ தொலைக்காட்சியின் அபாயம் என்று குறிப்பிட்டார்.

24
மணி நேர செய்தி சேனல்கள் பெருகிய பிறகு செய்திகளின் தேவை அதிகமாகிவிட்டது. செய்தி சேனல்கள் அகோரப் பசியுடன் பிரேக்கிங் நியூஸுக்காக அலைகின்றன. அவைகளின் பசியின் பெரும் பகுதியை தீர்த்து வைப்பவர்கள் செலிபி‌ரிட்டிகள் எனப்படும் பிரபலமானவர்கள். ஐஸ்வர்யாராய் சேலை கட்டினால் அதை நாள் முழுவதும் காண்பிக்க செய்திச் சேனல்கள் கூச்சப்படுவதில்லை. இதனால் நாம் எதிர்பார்க்காத திசையிலிருந்தெல்லாம் செலிபி‌ரிட்டிகள் முளைத்து வருகிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரை ஆகப்பெ‌ரிய செலிபி‌ரிட்டி ர‌ஜினிகாந்த். இந்த செலிபி‌ரிட்டி எல்லோரையும்விட அதிகமாக ரசிகர்களுக்கு தேவைப்படுகிறார். தான் யாருக்கு ரசிகராக இருக்கிறோமோ அவர்தான் உலகின் ஆகச் சிறந்த பிரபலமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு ரசிகனுமே விரும்புகிறான்.

இந்த செலிபி‌ரிட்டி ஷங்கருக்கு மிகவும் தேவைப்படுகிறார். எந்திரன் போன்ற காஸ்ட்லியான கனவை நனவாக்க கடைநிலை செலிபி‌ரிட்டியாலோ, இடைநிலை செலிபி‌ரிட்டியாலோ முடியாது.

இந்த செலிபி‌ரிட்டி சன் பிக்சர்ஸ் போன்ற நிறுவனத்துக்கு மிக மிகத் தேவை. 150 கோடியை முதலீடு செய்து அதைவிட பல மடங்கை அறுவடை செய்ய நாக்க முக்க செலிபி‌ரிட்டிகளால் முடியவே முடியாது. ர‌ஜினி போன்ற மெகா செலிபி‌ரிட்டிதான் வேண்டும்.

WD
இன்று தமிழக மக்கள் அனைவரும் எந்திரன் எனும் தேவதூதனை எதிர்நோக்கி நோன்பு இருப்பதான சித்திரத்தை தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன. இந்த மிகை யதார்த்தத்திற்குள்தான் இன்று தமிழகம் மிதந்து கொண்டிருக்கிறது. எந்திரனை முதல் நாள் முதல் ஷேபார்ப்பதே ஒரு மனிதனின் ஆகப்பெ‌ரிய கடமை போலவும், அதுவே மாபெரும் கௌரவம் போலவும் தினம் மந்தி‌ரித்துக் கொண்டிருக்கின்றன ஊடகங்கள். இந்த மந்திரத்துக்கு கட்டுப்பட்டு முதல் நாள் ஐந்தாயிரம் பத்தாயிரம் பணம் கொடுத்து படம் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் நூற்றைம்பது கோடியை முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையினால்தான் திரையரங்கு உ‌ரிமையாளர்கள் பல கோடி ரூபாய்க்கு எந்திரன் பெட்டியை வாங்கியிருக்கிறார்கள்.

எந்திரன் மீது வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் இந்த விளம்பர வெளிச்சம் தமிழகத்தின் கண்களை கூசச் செய்கிறது. பியர் பூர்தியூவின் வார்த்தைகளில் சொன்னால், மீடியாக்களின் அதிகாரத்தால் உருவாக்கப்பட்டிருக்கும், எந்திரனே எல்லாம் என்ற மிகை யதார்த்த உலகில்தான் இன்று தமிழகம் இருக்கிறது.

முதல் நாளே எந்திரனை பார்க்கும் வேட்கையில் பல்லாயிரம் ரூபாயை காவு கொடுக்க நாம் தயாரானால், நம்மை அறியாமலே நாம் மீடியாவின் மிகை யதார்த்த வலையில் சிக்கிக் கொண்டோம் என்று அர்த்தம்.

ஐநூறும், ஐந்தாயிரமும் கொடுத்து விட்டில் பூச்சி ஆகப்போகிறோமா? இல்லை, இரண்டு வாரங்கள் பொறுத்திருந்து திரையரங்கு கட்டணத்தை மட்டுமே செலுத்தி நமது சுய கௌரவத்தை மீட்டெடுக்கப் போகிறோமா?

முடிவு தனி மனிதர்களின் கையில்தான் இருக்கிறது. நன்றி யாஹூ

Tuesday, September 7, 2010

என் தேடல்

முகம் தொலைத்தவர்களின்
முகவரி தேடும்
ஒரு
பார்வை அற்றவன்
தேடல் இது

Saturday, September 4, 2010

இது தான் மேட்டர்

அந்த விஷயத்தில் யாருக்கு எவ்வளவு நேரம் தேவை என்ற சுவராஸ்யமான ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. எரிக் கோர்ட்டி என்ற ஆராய்ச்சியாளர் நடத்திய இந்த ஆய்வில் 50 ஜோடி கலந்து கொள்ளச் செய்தார். ஆய்வின் முடிவில் ஒருசிலர் தங்களுடைய பார்ட்னர்கள் 2 அல்லது 3 நிமிடங்களில் முடித்து கொள்வதால் திருப்தி அடைய முடிவதில்லை என்றும், ஒருசிலர் 7 நிமிடம் வரை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது என்று தெரிவித்துள்ளனர். மேலும் ஒருசிலர் 1 3 நிமிடம் வரை சேர்ந்திருக்கும் போது மிக்க மகிழ்ச்சியோடு இருப்பதாக தெரிவித்தனர். மேலும் தனது ஆய்வின்முடிவில் தம்பதியர் ஒருவரை ஒருவர் முழு இரவில் பார்த்துக்கொண்டே இருப்பதை காட்டிலும் கட்டித்தழுவிக்கொண்டிருப்பதே தங்களை உற்சாகமடையச் செய்வதாக கூறியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

நல்ல விசயங்களை நாலு பேர்க்கு சொல்றதுன்னா எதுவும் தப்பு இல்லை