Powered By Blogger

Thursday, July 8, 2010

என்னை பற்றி

ஒன்னும் பெருசாய் சொல்றதுக்கு இல்லை கொங்கு நாட்டை சேர்ந்த ஈரோடு ல பொறந்தேன் பொறந்ததுக்கு பலனா பல ஊருல வேலை பார்த்துட்டு இப்போ கோவைல இருக்கேன்

எனக்கும் ஒரு ஆசை நம்பளும் ஒரு ப்ளாக் ஆரம்பிக்கணும்னு அதை பல பேர் படிச்சு குழம்பனும் என்கின்ற உயர்ந்த நோக்கத்தோடு ஆரம்பிச்ச ப்ளாக் இது , நான் ப்ளாக் அரம்பிச்சதுனால பெட்ரோல் விலை, விலைவாசி குறையும் லஞ்சம் மறையும் நு கைபுள்ளதனமாய் நினைக்க கூடாது

தலைப்பு என்ன வைகிலாமுனு கிழக்கு மேற்க்கு பார்த்து யோசிசுகிட்டு இருந்தேன் அப்போ தான் இந்த தலைப்பு கிடைத்தது
தலைப்பை பற்றி ஒரு விளக்கம்

நானும் என் நண்பன் பிரசன்னாவும் டி குடிக்க டி கடைக்கு போன்னோம் அப்போ டி கடை பையன் வந்து என்ன சாபிடிரிங்க நு கேட்டான், நான் சொன்னேன் ஒரு மசால் தோசை ஒரு முட்டை பொடி மாஸ் நு அதுகப்புறம் நடந்ததை நான் சொல்லனுமா அப்பாவித்தனமாய் கேள்வி கேட்டு அடி வாங்குறதே நம்ப பொழப்பு ஆகிடுச்சு, அதனால் அப்பாவின்னு தலைப்பு வச்சேன்

வெட்டியா எல்லா ஊருக்கும் போவேன் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் நாடோடி மாதிரி சுத்துவேன் அதனால் நாடோடி நு பேர் வச்சேன்

ஹப்பாடா எப்படியோ தலைப்புக்கு விளக்கம் குடுத்தாச்சு

இனிமேல் நான் உளறதை நீங்க படிக்கணும் , உளறது என் தலை விதி அதை படிக்கிறது உங்க தலை விதி

No comments:

Post a Comment